ஜூன் மாத நாவல் - இது வானின் பூபாளம்

Image
  NM tamil novel world தளத்தில் நேற்று முதல் ஆரம்பம். குடும்ப அரசியலால் பிரியும் வான்மதியும் பூபாலனும் இணைவார்களா? தெரிந்துகொள்ள இணைப்பை க்ளிக் செய்யுங்கள்! இது வானின் பூபாளம் – Tamil Novels | Nithya Mariappan

Teasers of tamil novels - டீசர்கள்

">



“கௌதம் எங்க தான் போனான் மய்யூ? ஏன் எல்லாரும் அவன் எங்க இருக்கான்ங்கிறத என் கிட்ட மறைக்கிறிங்க? என் டைரில இருந்த அவன் போட்டோவ யாரோ கிழிச்சிருக்காங்க... என்னைச் சுத்தி என்ன தான் நடக்குதுனு புரியல மய்யூ... இப்பிடியே போனா நான் பைத்தியம் ஆயிடுவேன்... உண்மைய சொல்லு மய்யூ... கௌதம் எங்க இருக்கான்? எனக்கு அவனைப் பாக்கணும்டி”

“அவன் இப்போ இங்க இல்ல யசோ... நான் தான் ஹாஸ்பிட்டல வச்சே சொன்னேன் தானே... அவன் டெல்லிக்குப் போயிட்டான்டி... இன்னும் நீ ஏன் அவனையே நினைச்சிட்டிருக்க?”

“பிகாஸ் ஐ லவ் ஹிம்... இது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சும் ஏன் என்னை இப்பிடி கஷ்டப்படுத்துறிங்க? அவன் டெல்லில இருக்கான்னு சொன்னேல்ல... அவனோட நம்பர் குடு... நானே அவன் கிட்ட பேசிக்கிறேன்”

“வேண்டாம் யசோ... நீ இப்போ அவன் கூட பேசுறது நல்லது கிடையாது”

யசோதரா விலுக்கென நிமிர்ந்து மயூரியை ஏறிட்டவள் “நான் லவ் பண்ணுனவன் கிட்ட பேசணுமா வேண்டாமானு நான் தான் டிசைட் பண்ணனும் மய்யூ... நீ நம்பர் குடுத்தா மட்டும் போதும்” என இறுகிய குரலில் கூற இப்போது மயூரியின் கண்ணில் கண்ணீர் நிரம்பியது.

என்ன சொல்லி இவளுக்குப் புரியவைப்பது? இவள் அழைத்தாலும் வர முடியாத நிலைக்கு கௌதம் சென்று நாளாயிற்று என்பதை எப்படி இவளிடம் சொல்வது? ஒரு வேளை மருத்துவர் சொன்னதைப் போல அதை எண்ணி இவள் இன்னும் தன் உடல்நிலையைக் கெடுத்துக் கொண்டால் பெரியப்பா பெரியம்மாவின் நிலை? ஆனால் இதற்கு மேலும் அந்த விசயத்தை இவளிடம் மறைப்பது இயலாத காரியம்!

யசோதராவின் நிராசை நிறைந்த முகம் மயூரியை வதைக்க ஆரம்பிக்க வேறு வழியின்றி அவள் சொல்லிவிட்டாள்.

“கௌதம் இனிமே உன் வாழ்க்கைல வர மாட்டான் யசோ... அவன் இப்போ உயிரோட இல்ல... உனக்கு ஆக்சிடெண்ட் ஆகி ஒன் மன்த்ல அவனும் ஒரு ஆக்சிடெண்ட்ல இறந்துட்டான்”

இதைச் சொல்லிவிட்டு மயூரி தன் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொள்ள இவ்வளவு நேரம் கண்ணீரும் கம்பலையுமாக இருந்த யசோதராவோ சிலையாய் சமைந்துவிட்டாள்.

*********** 

“அந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பொண்ணு ஒரு அப்பாவிடா சித்து”

“அப்பிடிங்கிற? பட் என்னால அப்பிடி நினைக்க முடியலயே! பாம்பை கூட நம்பு; பொண்ணை நம்பாதனு நம்ம முன்னோர்களே சொல்லிருக்காங்கடா”

“அஹான்... உன் வசதிக்கேத்த மாதிரி பழமொழிய மாத்தி சொல்லுற... சரியான கேடிடா நீ” என்று அவனைக் கேலி செய்த மாதவனை நமட்டுச்சிரிப்புடன் ஏறிட்டான் சித்தார்த்.

“அத விடு... ஏன் அந்தப் பொண்ணை பத்தி பேசுனா உன் கண்ணுல பல்ப் எரியுது? எனக்குத் தெரியாம லவ் ரூட்ல டிராவல் பண்ணுறியாடா மேடி?”

“உன்னை மாதிரி ஒருத்தனை கூடவே வச்சுக்கிட்டு எவனாச்சும் கமிட் ஆக முடியுமாடா? காலேஜ் டேய்ஸ்லயே எனக்கு பிரபோஸ் பண்ண வந்த பொண்ணுங்க எல்லார் கிட்டவும் எனக்காக ஊர்ல அத்தைப்பொண்ணு வெயிட் பண்ணுறானு சொல்லி ஓடவச்சவன் தானே நீ... அன்னைக்கு ஆரம்பிச்சு இன்னைக்கு வரைக்கும் பாஸ்ட் செவன் இயர்சா என் வாழ்க்கைல ஒரு வெளிச்சமும் வரல... இதுல உனக்கு என் கண்ணுல பல்ப் தெரியுதா? அந்த பல்ப் பியூஸ் போய் ரொம்ப நாள் ஆகுதுடா நல்லவனே” என்றான் மாதவன் பொறுமலுடன்.

அதைக் கேட்டு சத்தம் போட்டு நகைக்க ஆரம்பித்தான் சித்தார்த். பின்னர் நண்பனின் தோளில் தட்டிக்கொடுத்தவன் “கண்டிப்பா உன் வாழ்க்கைல குண்டு பல்ப் எரியவைக்க ஒரு பொண்ணு வருவாடா... ஆனா அவ சினி ஃபீல்ட்ல இருக்க வேண்டாங்கிறது என்னோட ஒபீனியன்... அப்பிடி மட்டும் இருந்துட்டா நாளைக்கு உங்க பசங்களும் இன்னொரு சித்துவாவும், ஜித்துவாவும் தான் வளருவாங்க” என தீவிரக்குரலில் சொல்லவும் மாதவனும் கேலிப்பேச்சை விட்டு நண்பனின் பேச்சுக்குக் காது கொடுத்தான்.

“ப்ச்... சித்து நான் சும்மா விளையாடுனேன்டா... எனக்கு மேரேஜல் இன்ட்ரெஸ்ட் இல்லடா... அப்பாவும் அக்காவும் அடிக்கடி இது பத்தி பேசுறாங்க... நீயே சொல்லு ட்வென்ட்டி எய்ட்ல எந்த மடையனாச்சும் மேரேஜ் பண்ணிப்பானா?”

“அப்போ சார் டேரக்டா அறுபதாம் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியால தான் இருக்கிங்க போல” என கிண்டல் செய்தான் சித்தார்த்.

Comments

  1. சூப்பர் மா 👌👌👌👌😍😍🥰😘

    ReplyDelete
    Replies
    1. Waiting dear Nithya.These days your writing comforts me a lot.

      Delete
    2. thanks a lot... iniku evng epi vanthudum

      Delete
  2. சூப்பர் மா 👌👌👌👌😍🥰😘

    ReplyDelete
  3. Teaser super a irukku waiting for the next epi

    ReplyDelete
  4. Wow...super... I love this story ❤ have chance to read 2nd time

    ReplyDelete
  5. ❤️❤️❤️ nalla irukke ❤️

    ReplyDelete
  6. ❤️❤️❤️நல்லா இருக்கே ❤️❤️❤️

    ReplyDelete
  7. அடேயப்பா... எப்பவோ படிச்சது. ஃபுல்லா மறந்து போச்சு. திரும்பவும் படிக்க அதுவும் ஃப்ரீ கொடுக்கும்போது கசக்க போகுதா என்ன..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete
  8. அடேயப்பா... எப்பவோ படிச்சது. ஃபுல்லா மறந்து போச்சு. திரும்பவும் படிக்க அதுவும் ஃப்ரீ கொடுக்கும்போது கசக்க போகுதா என்ன..?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

    ReplyDelete

Post a Comment

புத்தக வெளியீடு அறிவிப்பு

உன்னில் இதயம் அளாவுதே, மதுரமாய் நின் காதல், ஒரு காதலும் சில கவிதைகளும், அன்பனின் ஆரபி - இந்த நான்கு நாவல்களும் இப்போது அருணோதயம் பதிப்பகத்தில் கிடைக்கும். வாங்க விரும்புகிறவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்

இந்த மாத அமேசான் வெளியீடு - ஒரு காதலும் சில கவிதைகளும்
உறவுகளால் இணைந்து உறவுகளால் பிணையும் சங்கவி - சரபேஸ்வரனின் காதல் கதை - குடும்ப நாவல்

Follow this blog for story Updates - என்னுடன் இணைந்திருங்கள் மக்களே!

Followers

Nithya Mariappan Audio Novels

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்

நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள்
யாவும் நீயாக மாறினாய் - புத்தம் புது முழு நாவல் - நித்யா மாரியப்பன் ஆடியோ நாவல்கள் சேனலில்

Copyright ©️ 2018 - 2025 Nithya Mariappan. All rights reserved .

This blog is managed by Nithya Mariappan. All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this blog will result in immediate legal action against the person concerned.