அலைவரிசை 30
“வாழ்க்கையில நம்ம இழந்த எல்லாமே கண்டிப்பா என்னைக்கோ ஒரு நாள் நம்ம கிட்ட திரும்ப வந்துடும்... ஆனா நம்ம எதிர்பார்த்த வழியில வராது... இதை நான் சொல்லல... ஜே.கே.ரௌலிங் தான் சொல்லிருக்குறாங்க... சோ, ஐயோ போச்சேனு மூலைல உக்காந்து அழுறத விட அடுத்து என்னனு வேலைய பாக்க கிளம்புறது தான் புத்திசாலித்தனம்... இழந்தத நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டிருந்தா நம்ம அனுபவிக்க வேண்டிய அழகான மொமண்ட்சை தவற விட்டுடுவோம்” -கிருதியின் கிறுக்கல் மொழிகள் தங்களது அறையில் கிடந்த பீன்பேக்கில் படுத்துக்கொண்டு மொபைலில் ஷ்ரவனிடம் மொக்கை போட்டுக்கொண்டிருந்தாள் பிரக்யா. அவளைக் கண் காட்டி பிரணவியிடம் ஏதோ கூறி சிரித்தாள் பிரக்ருதி. பிரணவி அவளது காதைத் திருகியவள் “லவ் பண்ணிப் பாரு... அப்ப தான் உனக்குப் புரியும்” என்றாள். இவர்களது அரட்டையைக் கவனியாது பிரக்யா – ஷ்ரவனின் உரையாடல் மொபைலில் தொடர்ந்தது. “தேர் ஆர் த்ரீ டைப்ஸ் ஆப் லவ்... தெரியுமா?” என ஷ்ரவன் கூற “நான் இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் லவ் பண்ணுறேன்... சோ எனக்கு உங்க அளவுக்கு இந்த சப்ஜெக்ட்ல நாலெட்ஜ் இல்ல புரொபசர்” என்று