பூங்காற்று 50

நீரஜாட்சி வழக்கம் போல அன்று உறக்கம் களை கையில் விடிந்து நேரமாகியிருந்தது. மெதுவாக கண்ணை திறந்தவள் தன்னை எதுவோ சூழ்ந்திருப்பதை உணர என்னவென்று எழுந்து பார்க்க நினைத்தவளுக்கு எழும்ப இயலவில்லை. என்னவோ ஏதோ என்று பதறியவளுக்கு தன்னை பொம்மை போல அணைத்து உறங்கிக் கொண்டிருந்தவனின் முகத்தை பார்த்ததும் தூக்கக்கலக்கம் அகன்றது. இவன் எப்போது இங்கே வந்தான் என்ற குழப்பத்துடன் அவன் கரங்களை விலக்க முயல அவன் விடாக்கண்டனாக இன்னும் இறுக்கமாக அணைத்தபடி "தூங்கு நீருகுட்டி" என்று அரைத்தூக்கத்தில் கூற நீரஜாட்சிக்கு அந்த காலைப்பொழுதிலேயே இரத்த அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்தது. தன்னை சுற்றி வளைத்திருக்கும் அவனது புஜத்தில் நறுக்கென்று கிள்ள அவன் பதறியடித்துக் கொண்டு எழுந்து புஜத்தை தேய்த்தபடி "ஏய் எதுக்குடி இப்பிடி கிள்ளி வைச்ச ?" என்று வலியில் முகத்தை சுருக்கிக் கொள்ள நீரஜாட்சி "உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா இங்கே வந்து தூங்குவ ?" என்று கூறிவிட்டு போர்வையை மடித்து அதாலேயே அவனுக்கு இரண்டு அடிகள் வைக்க ரகுநந்தன் "பிசாசு மாதிரி அடிக்காதேடி. ஒரு மனுசன் அவன் பொண்டாட்டிய...
Comments
Post a Comment