மழை 3

“போதைக்கு அடிமையாவதில் முக்கியக் காரணி தனிமனித குணாதிசயம். பிடிவாதம், தனிமனிதக்கட்டுப்பாடின்மை, தனிமை, பெற்றோரின் வழிக்காட்டுதலின்மை போன்றவை பதின்பருவத்தினர் போதையில் விழுவதற்கு முக்கியக் காரணிகளாக உள்ளன. அவர்கள் சார்ந்திருக்கும் சமூக அமைப்பும், நண்பர்கள் வட்டாரமும் அவர்களுடைய பாதையை நிர்ணயிக்கின்றன” -எழுத்தாளர் சேவியர் கே.ஆர் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனை…. “மிஸ் யசோதராவோட பிசிக்கல் ஹெல்த்தும் சரி, மெண்டல் ஹெல்த்தும் சரி... இன்னும் ஃபுல்லா ரெகவர் ஆகல... கோமால இருந்து மட்டும் தான் அவங்க ரெகவர் ஆயிருக்காங்க... அவங்களோட ஹெல்த் இன்னும் பழையபடி ஆகல... சோ ரொம்ப உடம்பை அலட்டிக்காம பாத்துக்கணும்... இன்னும் ஒன் வீக் அவங்க எங்க அப்சர்வேசன்ல இருக்கணும் விஷ்ணு சார்” மருத்துவர் சொன்னதைக் கேட்டுவிட்டு யோசனையுடன் நெற்றியில் கீறியபடி புருவம் சுருக்கி அமர்ந்திருந்தான் அவன். அவனருகில் அமர்ந்திருந்தனர் ஒரு நடுத்தரவயது தம்பதியினர். அந்த ஆணுக்கு ஐம்பந்தைந்து வயது இருக்கலாம். ஆனால் ஆய்ந்து ஓய்ந்து போன தோற்றம். அவரருகில் அமர்ந்திருந்த பெண்மணிக்கோ முகத்தில் கவலை தனது நிரந்தரமான தடத்தைப் பதித்திருந்தத...
Semma semma semma semma semma semma
ReplyDeleteIva Maya na appo unmaiyana mahima yara irukum.. oru velai ruhi than original athai ponna