“ஒருத்தர் ஃபேக்கா பழகுறாங்கனு எப்பிடி கண்டுபிடிக்கலாம் தெரியுமா? அவங்க எல்லார் கிட்டவும் நல்ல பேர் வாங்குவாங்க... ஒருத்தரால எல்லார் கிட்டவும் நல்லவங்க பட்டம் வாங்க முடியுதுனா அவங்க கண்டிப்பா நடிக்கிறாங்கனு அர்த்தம்... நீங்க உண்மையானவங்களா இருந்தா யூ மஸ்ட் கெட் ஃபியூ எனிமீஸ்... எதிரியா தான் இருக்கணும்னு அவசியமில்ல... அட்லீஸ்ட் உங்களை பிடிக்காதவங்க கொஞ்சபேராச்சும் இருப்பாங்க... சோ எல்லார் கிட்டவும் நல்ல பேர் வாங்குறதுக்காக உங்க ஒரிஜினாலிட்டிய இழந்துடாதிங்க... ஃபேக் பெர்சனா மாறிடாதிங்க... நாலு பேர் நாலு விதமா பேசுவாங்கனு நம்மளை நம்ம மாத்துனா நோ யூஸ், பிகாஸ் அந்த நாலு பேர் நம்ம வாழ்க்கைய வாழப்போறதில்லயே” -கே.கேவின் மனதின் குரல் “காலம் மாறிப்போச்சும்மா... இப்பல்லாம் நம்ம ஊர் கல்யாணத்துலயும் மெஹந்தி, சங்கீத்னு வடக்கத்தி பழக்கத்த கொண்டு வந்துட்டாங்க... சொன்னா இந்த பொண்ணு எங்க கேக்குறா?” சலித்துக்கொண்டபடியே கைகளில் மருதாணியிட்டு...