Posts

Showing posts from July, 2024

பூங்காற்று 40

Image
  மாங்கல்ய தாரணம் முடிந்ததும் மணமக்கள் சப்தபதி வைத்துவிட்டு பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள செல்ல ரகுநந்தன் மறக்காமல் நீரஜாட்சியிடம் "நீரு சைட் மாத்திக்கிறியா ?" என்று கேட்க அவள் வேண்டாமென்று மறுத்துவிட்டு பொறுப்பான மருமகளாக பத்மாவதி மற்றும் வேங்கடநாதனின் காலில் கணவனுடன் சேர்ந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். அடுத்து கோதண்டராமன் மைதிலியை நோக்கி செல்லும் போது ரகுநந்தன் "கிரேட் இம்ப்ரூவ்மெண்ட் நீருகுட்டி" என்று பாராட்ட அவனிடம் நாக்கை துருத்தி அழகு காண்பித்துவிட்டு சின்ன மாமா , சின்ன மாமியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டாள். ஆசிர்வாதம் வாங்க வேண்டிய பெரியவர்களின் பட்டியல் சற்று நீளம் என்பதால் ஒருவர் பாக்கியின்றி அனைவரின் ஆசிர்வாதத்தையும் வாங்கி முடித்ததும் நீரஜாட்சி தான் மனதில் நினைத்த திட்டத்தை செயல்படுத்த இது தான் சரியான சமயம் என்று எண்ணியவள் " கிருஷ்ணா" என்று அழைத்தவாறு ஏதோ சொல்லப் போக அது பத்மாவதியின் பெரிய குரலில் அடங்கிவிட்டது. இவர் எதற்காக கிருஷ்ணஜாட்சியை அழைக்கிறார் என்று புருவங்கள் முடிச்சிட அவள் க...

அலைவரிசை 57

Image
  “வானம் நிரந்தரமா அங்க இருக்குற சூரியன், நிலா, நட்சத்திரங்களுக்கு மட்டுமில்ல, அதுல பறக்குற பறவைங்களுக்கும் சொந்தம்... இவ்ளோ பெரிய வானமே பொதுச்சொத்தா இருக்குறப்ப மனுசங்க மட்டும் ஏன் செல்வாக்கு, அதிகாரத்த தனக்கு மட்டும் சொந்தமாக்கிக்க துடிக்கிறாங்கனு புரியல... ஒரு மனுசனுக்கு அடிப்படையான தேவை ஃபுட், ஷெல்டர், ட்ரஸ்... இப்ப அது கூட வேலையையும் சேர்த்துக்கலாம்... பிகாஸ் வேலைனு ஒன்னு இல்லனா மத்த மூனும் இம்பாசிபிள்... அதிகாரமோ செல்வாக்கோ அடிப்படையானது இல்ல... அது சமுதாயத்தால நமக்கு குடுக்கப்படணுமே தவிர கீழ்த்தரமா இறங்கி அதை அடையக்கூடாது... எந்த ஒரு மனுசன் அதிகாரவெறி, செல்வாக்குப்பசிக்கு அடிமையா மாறிட்டானோ அவனுக்கு வாழ்க்கையில திருப்திங்கிற ஒன்னு வரவே வராது... சாதாரண மக்களை மாதிரி சின்ன சின்ன சந்தோசங்களை அவங்களுக்கு ரசிக்கத் தெரியாது.                                               -கே.கேவின் மனதின் குரல் அபராஜித் ஷ்ரவனையும் கேசவையும் தவிப்போடு பார்த்தான். “எனக்குப் பொண்ணுங்க கூட...