அலைவரிசை 57
“வானம் நிரந்தரமா அங்க இருக்குற சூரியன், நிலா, நட்சத்திரங்களுக்கு மட்டுமில்ல, அதுல பறக்குற பறவைங்களுக்கும் சொந்தம்... இவ்ளோ பெரிய வானமே பொதுச்சொத்தா இருக்குறப்ப மனுசங்க மட்டும் ஏன் செல்வாக்கு, அதிகாரத்த தனக்கு மட்டும் சொந்தமாக்கிக்க துடிக்கிறாங்கனு புரியல... ஒரு மனுசனுக்கு அடிப்படையான தேவை ஃபுட், ஷெல்டர், ட்ரஸ்... இப்ப அது கூட வேலையையும் சேர்த்துக்கலாம்... பிகாஸ் வேலைனு ஒன்னு இல்லனா மத்த மூனும் இம்பாசிபிள்... அதிகாரமோ செல்வாக்கோ அடிப்படையானது இல்ல... அது சமுதாயத்தால நமக்கு குடுக்கப்படணுமே தவிர கீழ்த்தரமா இறங்கி அதை அடையக்கூடாது... எந்த ஒரு மனுசன் அதிகாரவெறி, செல்வாக்குப்பசிக்கு அடிமையா மாறிட்டானோ அவனுக்கு வாழ்க்கையில திருப்திங்கிற ஒன்னு வரவே வராது... சாதாரண மக்களை மாதிரி சின்ன சின்ன சந்தோசங்களை அவங்களுக்கு ரசிக்கத் தெரியாது. -கே.கேவின் மனதின் குரல் அபராஜித் ஷ்ரவனையும் கேசவையும் தவிப்போடு பார்த்தான். “எனக்குப் பொண்ணுங்க கூட முன்ன பின்ன பேசி பழக்கமில்ல சார்” என்றான் லட்சம் முறையாக. “நிகிதா கிட்ட பேசுனியே, அது என்ன கணக்கு?” என ஷ்ரவன் கிடுக்கு