அன்பு 7
“நெஞ்சில் நிரம்பிய நேசத்தில் ஒரு துளி கோபம் கலந்தேன். மொத்த நேசமும் துவேசமாய் மாறிப்போனது. மீண்டும் அந்நேசத்தை மீட்க எண்ணாது ஈகோவை ஆடையாய் தரித்துக் கொண்டது மூளை” சம்விருதாவின் பேச்சனைத்தையும் ஒன்று விடாமல் கேட்டுவிட்டான் சாந்தனு. அவள் பேசியது அனைத்தையும் ஒப்புக்கொள்ள இப்போது கூட அவன் மனம் மறுத்தது. ஏன் என்றால் சிறுவயதில் எத்தனையோ முறை தந்தை கோபத்தில் தாயாரை அறைவதைப் பார்த்திருக்கிறான் அவன். ஆனால் அவனது அன்னை ஒன்றும் அதற்காக அவரை விட்டு விலகிவிடவில்லை. நான்கைந்து நாட்கள் பேசாமலிருந்து விட்டு மீண்டும் சமாதானமாகிவிடுவது அவர்களின் வாடிக்கை. எனவே கணவன் மனைவியை அறைவது மாபெரும் தவறு என்று அவனது புத்திக்கு இப்போது வரைக்கும் உறைக்கவில்லை. அவனைப் பொறுத்தவரை படிப்புக்காக குழந்தைப்பேற்றை தள்ளிப் போட சம்விருதாவுக்குக் கிடைத்த வாய்ப்பு தான் அந்நிகழ்வு. தான் கோபத்தில் அறைந்ததை சாக்காக வைத்துக்கொண்டு படிப்புக்குத் தடையாக தானோ குழந்தையோ வந்துவிடுவோமென எண்ணித் தான் சம்விருதா விவாகரத்து முடிவுக்கு வந்திருக்கிறாள் என்பது அவனது ஊகம். அப்படி இல்லை என்று சொல்லி அவனுக்குப் புரியவைக்க சம்விருதாவ