Posts

Showing posts from 2020

பூங்காற்று 39

Image
  பூங்காற்று 39 திருமண நாளின் விடியல் அழகாக ஆரம்பிக்க நீரஜாட்சியை அதிகாலையிலேயே எழுப்பி விட்டாள் கிருஷ்ணஜாட்சி. அவள் கண்ணை கசக்கிக் கொண்டு எழும்புகையிலேயே   அவுட் ஹவுசினுள் நுழைந்தார் பத்மாவதி. " கிருஷ்ணா நீரஜா எழும்பிட்டாளா ? தலையில எண்ணெய் வச்சிக்கணும்டி" என்று கூறியபடி நீரஜாட்சியிடம் வந்தவர் அவளைச் சீக்கிரமாக குளித்துவிட்டு தயாராக கூற அவளும் அவர்சொன்னபடி குளித்துவிட்டு   புடவையை சுற்றிக் கொண்டு வந்தாள். அதன் பின்னர் அடுத்த சடங்குக்கு அவளை அழைத்துச் செல்ல கிருஷ்ணஜாட்சியும் சீக்கிரமாக குளித்துவிட்டு நீரஜாட்சிக்கு நலங்கு வைப்பதற்காக அவளும் சென்றுவிட்டாள். அங்கே மைதிலி , சீதாலெட்சுமி , மைத்திரேயி , ஸ்ருதிகீர்த்தி இவர்களுடன் அவர்களின் மாமியார்களும் இருக்க பத்மாவதியே முன் நின்று நீரஜாட்சிக்கு மஞ்சள் பூசி நலங்கு வைக்க மற்றவர்களும் அதைப் பின்பற்றி சடங்கை ஆரம்பித்தனர். அதே நேரம் மண்டபத்தில் ரகுநந்தன் விரதத்துக்காக தயாரானான். ஹர்சவர்தனும் , அவனது தந்தை , சித்தப்பா மற்றும் சகோதரிகளின் கணவர்கள் என அனைவரும் சூழ்ந்து கேலி செய்ய அவனும் திருமணச்சடங்குகளில் ஐக்கி...

🌺 பூங்காற்று 20 🌺

Story was removed... Available in Kindle

🌺 பூங்காற்று 19 🌺

Story was removed... Available in Kindle  

🌺 பூங்காற்று 18 🌺

Story was removed... Available in Kindle

🌺 பூங்காற்று 17 🌺

Story was removed... Available in Kindle

🌺 பூங்காற்று 16 🌺

  🌺 பூங்காற்று 16 🌺 பத்மாவதியிடம் தான் அவர்கள் நிறுவனத்திலேயே வேலைக்குச் சேர்வதாகச் சொல்லிவிட்டு வந்தாலும் நீரஜாட்சிக்கு இப்போதும் அங்கே செல்வதில் தயக்கமே. தேவை இல்லாத விஷயத்துக்கு மாமி பயப்படுகிறாரோ என்று எண்ணியவள் இன்னொரு முறை அவரிடம் சென்று பேசிப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் கிருஷ்ணஜாட்சியிடம் சொல்லிவிட்டு வீட்டை நோக்கிச் சென்றாள். விஜயலெட்சுமி இரவாகியும் இன்னும் கிளம்பாமல் பத்மாவதியுடனே சுற்றிக் கொண்டிருந்தவர் நீரஜாட்சியைக் கண்டதும் "பத்மா குழந்தே உன்னைத் தான் பார்க்க வந்திருக்கா போலிருக்கு. நேக்கும் நாழியறதுடி. நான் ஆத்துக்கு கிளம்பறேன்" என்றுச் சொன்னவர் நீரஜாட்சியிடம் வந்து அவளின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சி "சமத்துப்பொண்ணா மாமி சொல்லற மாதிரி நடந்துக்கணும். வரட்டுமாடி ?" என்றவாறு வெளியேறினார். பத்மாவதி அவரை அனுப்பிவைத்துவிட்டு வந்தவர் நீரஜாட்சியிடம் சோ பா வில் அமருமாறு சைகை காட்ட அவள் மறுத்துவிட்டு "மாமி! கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. உங்களோட இந்த பயம் அவசியமே இல்லாததுனு உங்களுக்கே புரியவரும். உங்களுக்கு இஷ்டமில்லாத எதையும் உங்க ப...

🌺 பூங்காற்று 15 🌺

  🌺 பூங்காற்று 15 🌺 வீட்டுக்குள் நுழையும் போதே வாயெல்லாம் பல்லாக நுழைந்த விஜயலெட்சுமியை வழக்கம் போல உற்சாகத்துடன் வரவேற்றார் பத்மாவதி. விஜயலெட்சுமியும் பத்மாவதிக்கு முப்பத்திரண்டு பற்களையும் காட்டிச் சிரித்தவர் அவரது தங்கையும் இளைய நாத்தனாருமான மைதிலியிடம் மட்டும் அதில் பாதி பற்களைக் காட்டி ஒரு அடக்கமான புன்னகையை வீசினார். அவருக்கு என்னவோ பத்மாவதியைப் போல மைதிலியிடம் பிடித்தம் இல்லை. மைதிலியும் அவரது அண்ணன் மனைவியின் குணம் தனக்கு ஒத்துப் போகாது என்பதால் அவரிடம் ஒரு அளவுக்கு மேல் உரிமை எடுத்துக் கொள்வதில்லை. எப்போதுமே நீ நலமா நான் நலம் என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு தான் அவர்களின் உறவின் நிலை இருந்தது. விஜயலெட்சுமி இரு சகோதரிகளிடமும் "நான் நம்ம குடும்ப ஜோ சி யரைத் தான் பாத் து ட்டு வந்தேன் பத்மா. இந்த மாசத்துல நல்ல நாள் இருக்கிறதால கல்யாணத்துக்கு முகூர்த்தநாள் குறிச்சுக் குடுத்திட்டார். நிச்சயத்தை இன்னையில இருந்து இரண்டு வாரத்துல குறிச்சு குடுத்திருக்கார். மைதிலி நீயும் பாருடி. நோக்கும் , உன் ஆத்துக்காரருக்கும் இந்த தேதிகள் வசதிப்படுமானு பார்த்து சொல்லுடிம்ம...