🌺 பூங்காற்று 15 🌺 வீட்டுக்குள் நுழையும் போதே வாயெல்லாம் பல்லாக நுழைந்த விஜயலெட்சுமியை வழக்கம் போல உற்சாகத்துடன் வரவேற்றார் பத்மாவதி. விஜயலெட்சுமியும் பத்மாவதிக்கு முப்பத்திரண்டு பற்களையும் காட்டிச் சிரித்தவர் அவரது தங்கையும் இளைய நாத்தனாருமான மைதிலியிடம் மட்டும் அதில் பாதி பற்களைக் காட்டி ஒரு அடக்கமான புன்னகையை வீசினார். அவருக்கு என்னவோ பத்மாவதியைப் போல மைதிலியிடம் பிடித்தம் இல்லை. மைதிலியும் அவரது அண்ணன் மனைவியின் குணம் தனக்கு ஒத்துப் போகாது என்பதால் அவரிடம் ஒரு அளவுக்கு மேல் உரிமை எடுத்துக் கொள்வதில்லை. எப்போதுமே நீ நலமா நான் நலம் என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு தான் அவர்களின் உறவின் நிலை இருந்தது. விஜயலெட்சுமி இரு சகோதரிகளிடமும் "நான் நம்ம குடும்ப ஜோ சி யரைத் தான் பாத் து ட்டு வந்தேன் பத்மா. இந்த மாசத்துல நல்ல நாள் இருக்கிறதால கல்யாணத்துக்கு முகூர்த்தநாள் குறிச்சுக் குடுத்திட்டார். நிச்சயத்தை இன்னையில இருந்து இரண்டு வாரத்துல குறிச்சு குடுத்திருக்கார். மைதிலி நீயும் பாருடி. நோக்கும் , உன் ஆத்துக்காரருக்கும் இந்த தேதிகள் வசதிப்படுமானு பார்த்து சொல்லுடிம்ம...