Posts

Showing posts from 2025

பூங்காற்று 47

Image
  ரகுநந்தன் சோஃபாவில் சாய்ந்தபடி   கண்ணாடி கதவுகளின் வழியே வெளியே தெரியும் காட்சிகளைக் கண்டபடியே "இவ்ளோ நடந்தும் எப்பிடி கேதரினை கல்யாணம் பண்ணிகிட்ட ? என்னால இதை இப்போ வரைக்கும் நம்ப முடியலைடா" என்று ஆற்றாமையுடன் கூறிக் கொண்டிருந்தான். அவனுக்கு எதிர்ப்புற சோஃபாவில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து காபியை அருந்திக் கொண்டே கண்ணாடிக்கதவின் வழியே தோட்டத்தில் எதையோ சீரமைத்துக் கொண்டிருந்த மனைவியின் அழகை கண்களால் பருகியபடியே "நடந்த எல்லா விஷயத்தையும் என்னால மறக்கவும் மன்னிக்கவும் முடிஞ்சதுக்கு ஒரே ஒரு காரணம் தான் நந்து. நான் கேதரினை எந்த அளவுக்கு காதலிக்கிறேனோ அதே அளவுக்கு அவளும் என்னை காதலிக்கிறா" என்று உணர்ச்சிப்பூர்வமான குரலில் கூற ரகுநந்தன் வெகுண்டவனாய் " நீ லவ் பண்ணுனது டோட்டல் லண்டன் சிட்டிக்கும் தெரியும்டா. பட் அவ உன்னை லவ் பண்ணுனானு நீ எதை வச்சு சொல்லுற ? உனக்கே நல்லா தெரியும் , அவ உன் லைஃப்ல வந்ததே உன் ஃபேக்டரி ப்ராடெக்டோட ஃபார்முலாவை திருட தானு. அப்புறம் நீ எப்பிடி அவளோடது லவ் தானு நம்புன ?" என்று படபடவென்று பொறிய அவனை கையமர்த்தினா...

பூங்காற்று 47

Image
  ரகுநந்தன் சோஃபாவில் சாய்ந்தபடி   கண்ணாடி கதவுகளின் வழியே வெளியே தெரியும் காட்சிகளைக் கண்டபடியே "இவ்ளோ நடந்தும் எப்பிடி கேதரினை கல்யாணம் பண்ணிகிட்ட ? என்னால இதை இப்போ வரைக்கும் நம்ப முடியலைடா" என்று ஆற்றாமையுடன் கூறிக் கொண்டிருந்தான். அவனுக்கு எதிர்ப்புற சோஃபாவில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்து காபியை அருந்திக் கொண்டே கண்ணாடிக்கதவின் வழியே தோட்டத்தில் எதையோ சீரமைத்துக் கொண்டிருந்த மனைவியின் அழகை கண்களால் பருகியபடியே "நடந்த எல்லா விஷயத்தையும் என்னால மறக்கவும் மன்னிக்கவும் முடிஞ்சதுக்கு ஒரே ஒரு காரணம் தான் நந்து. நான் கேதரினை எந்த அளவுக்கு காதலிக்கிறேனோ அதே அளவுக்கு அவளும் என்னை காதலிக்கிறா" என்று உணர்ச்சிப்பூர்வமான குரலில் கூற ரகுநந்தன் வெகுண்டவனாய் " நீ லவ் பண்ணுனது டோட்டல் லண்டன் சிட்டிக்கும் தெரியும்டா. பட் அவ உன்னை லவ் பண்ணுனானு நீ எதை வச்சு சொல்லுற ? உனக்கே நல்லா தெரியும் , அவ உன் லைஃப்ல வந்ததே உன் ஃபேக்டரி ப்ராடெக்டோட ஃபார்முலாவை திருட தானு. அப்புறம் நீ எப்பிடி அவளோடது லவ் தானு நம்புன ?" என்று படபடவென்று பொறிய அவனை கையமர்த்தினா...

பூங்காற்று 46

Image
நீரஜாட்சி செயினை வீசி எறிந்தவள் சட்டென்று எழுந்து போகையில் மொபைலில் அழைப்பு வந்தது. ரகுநந்தன் தான் அழைக்கிறானோ என்ற நப்பாசையுடன் அவசரமாக திரையை பார்க்க அழைத்தவரோ தாத்தாவின் நண்பரான கும்பகோணம் கிருஷ்ணமூர்த்தி. அவர் எப்போதுமே சகோதரிகள் இருவருக்கும் போன் செய்து நலம் விசாரிப்பது வழக்கம். எனவே உடனே அழைப்பை ஏற்றவள் "சொல்லுங்க தாத்தா! எப்பிடி இருக்கிங்க ?" என்று அவரிடம் பேச ஆரம்பித்தாள். அவர் "அம்மாடி நீரஜா! தஞ்சாவூர்ல உங்களோட ஆத்துல சில மராமத்து வேலை பண்ணனும்னு உன் மாமாக்கு ஒரு வாரம் முன்னாடி சொல்லிருந்தேன்டிமா. , அவன் அதை மறந்துட்டானா ? ஆத்தை இப்பிடியே போட்டுட்டேள்னு வை , அப்புறம் சிதிலமாயிடும்" என்று அவள் பிறந்த வீட்டை பற்றி கூற நீரஜாட்சி "என்ன சொல்லுறிங்க தாத்தா ? மாமா தான் அடிக்கடி போய் அந்த வீட்டை பார்த்துக்கிறாங்களே" என்று வினவ அவர் "இந்த ஆறு மாச காலமா அவன் அங்கே வரலைடிமா. ஹர்சனோட விவாகத்துல ஆரம்பிச்ச பிரச்சனையால வேங்கடநாதனுக்கு மனவுளைச்சல் , கோதண்டராமனுக்கும் முடியாம போயிடுத்து. இதுல பட்டுவும் என்னாட்டம் வயசாளி. அதனால யாரோட கவனமு...

பூங்காற்று 45

Image
பூங்காற்று 45 நீரஜாட்சிக்கும் ரகுநந்தனுக்குமான மோதல்கள் ஒரு பக்கம் இருக்க பெரியவர்கள் அனைவரும் ஆன்மீக சுற்றுலாவுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். ஹர்சவர்தனும் கிருஷ்ணஜாட்சியும் மற்றொரு புறம் தேனிலவு செல்வதற்காக தங்களின் பணிகளை முழுவீச்சில் முடிக்க வேண்டியிருந்ததால் இவர்களில் யாருக்குமே நீரஜாட்சி , ரகுநந்தனின் போக்கு கண்ணில் படவில்லை. பத்மாவதியும் மைதிலியும் முதலில் அதை கவனித்திருந்தாலும் நீரஜாட்சி கூறிய சமாதானத்தில் இருவரும் அரைமனதுடன் சமாதானமாயினர். ஆனால் இருவருமே தத்தம் கணவரிடம் இதை பற்றி இன்னும் ஒரு வார்த்தை மூச்சுவிடவில்லை. தெரிந்தால் அவர்களும் இதை நினைத்து மனதை போட்டு குழப்பிக் கொள்வார்கள் என்ற எண்ணம் தான். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் முதலில் பக்கத்து மாநிலத்தில் உள்ள இடங்களுக்கு செல்லலாம் என்று சுற்றுலா கமிட்டியினர் முடிவு செய்திருந்தனர். அங்கே செல்வதற்கு பேருந்தும் தயாராக இருந்தது. தூர பிரதேசங்களுக்கு மட்டும் விமானத்தில் சென்று கொள்ளலாம் என்ற அவர்களின் முடிவு அனைவருக்கும் சரியென்று பட்டது. இவற்றை எல்லாம் முடித்துவிட்டு தமிழ்நாட்டில் உள்ள மற்ற இடங்களையும் இறுதியாக...

பூங்காற்று 44

Image
மறுநாள் காலை வீட்டில் அனைவரும் காலையுணவுக்காக ஒன்றாக அமர்ந்து விட நீரஜாட்சி மைதிலியுடன் சேர்ந்து சமையலறையில் இருந்து பாத்திரங்களை கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்துக் கொண்டிருந்தாள். படிகளில் தட்தட்டென்று சத்தம் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தவள் ரகுநந்தன் சட்டையின் கையை மடித்துவிட்டபடி இறங்கி வருவதைக் கண்டதும் "இந்த போஸுக்குலாம் குறைச்சலே இல்ல" என்று உதட்டைச் சுழித்துக் கொண்டாள். அவனும் ஒரு முறைப்புடன் வந்து அமர அவள் சட்டென்று நகர்ந்து சீதாலெட்சுமியிடம் சென்று அமர்ந்து கொண்டாள். அவர் அவளுக்கு இட்லியை ஊட்டிவிட அவருடன் அரட்டை அடித்தபடி சாப்பிட்டவளை கண்ணால் சுட்டபடி அவனும் சாப்பிட ஆரம்பித்தான். வேங்கடநாதன் "ஆமா ஹர்சாவும் கிருஷ்ணாவும் ஏன் இன்னும் வரலை ?" என்று கேட்கும் போதே இருவரும் படிகளில் இருந்து இறங்கி வர நீரஜாட்சி "கிருஷ்ணா இங்கே வா" என்று அக்காவை தன்னருகில் அமர வைத்தவள் சீதாலெட்சுமியிடம் ஏதோ சொல்லி சிரிக்க ஆரம்பித்தாள். அதைக் கேட்டு கிருஷ்ணஜாட்சியின் முகம் சிவக்க ஹர்சவர்தன் நீரஜாட்சியிடம் "அப்பிடி என்ன தான் பாட்டி கிட்ட சொன்ன ந...