பூங்காற்று 45

பூங்காற்று 45 நீரஜாட்சிக்கும் ரகுநந்தனுக்குமான மோதல்கள் ஒரு பக்கம் இருக்க பெரியவர்கள் அனைவரும் ஆன்மீக சுற்றுலாவுக்காக தயாராகிக் கொண்டிருந்தனர். ஹர்சவர்தனும் கிருஷ்ணஜாட்சியும் மற்றொரு புறம் தேனிலவு செல்வதற்காக தங்களின் பணிகளை முழுவீச்சில் முடிக்க வேண்டியிருந்ததால் இவர்களில் யாருக்குமே நீரஜாட்சி , ரகுநந்தனின் போக்கு கண்ணில் படவில்லை. பத்மாவதியும் மைதிலியும் முதலில் அதை கவனித்திருந்தாலும் நீரஜாட்சி கூறிய சமாதானத்தில் இருவரும் அரைமனதுடன் சமாதானமாயினர். ஆனால் இருவருமே தத்தம் கணவரிடம் இதை பற்றி இன்னும் ஒரு வார்த்தை மூச்சுவிடவில்லை. தெரிந்தால் அவர்களும் இதை நினைத்து மனதை போட்டு குழப்பிக் கொள்வார்கள் என்ற எண்ணம் தான். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் முதலில் பக்கத்து மாநிலத்தில் உள்ள இடங்களுக்கு செல்லலாம் என்று சுற்றுலா கமிட்டியினர் முடிவு செய்திருந்தனர். அங்கே செல்வதற்கு பேருந்தும் தயாராக இருந்தது. தூர பிரதேசங்களுக்கு மட்டும் விமானத்தில் சென்று கொள்ளலாம் என்ற அவர்களின் முடிவு அனைவருக்கும் சரியென்று பட்டது. இவற்றை எல்லாம் முடித்துவிட்டு தமிழ்நாட்டில் உள்ள மற்ற இடங்களையும் இறுதியாக...
Super
ReplyDeletethank you sis
Delete