மழை 5

“பெண்களுக்கு மத்தியில் போதைப் பழக்கத்தை கண்டறிவது இன்னும் கடினமாக உள்ளது. பெண்களின் போதைப் பழக்கம் பெரும் களங்கமாக கருதப்படுகிறது. எனவே மக்கள் அதை மறைக்க முற்படுவதுடன், அப்பழக்கத்துக்கு ஆளான பெண்களை மருத்துவர்களிடமும் அழைத்து செல்வதில்லை” -முக்தா பன்டம்பேகர், முக்தாங்கன் போதை மறுவாழ்வு மையம் சவி வில்லா... அந்த மாளிகையின் மூன்றாம் தளத்தைத் தனதாக்கிக் கொண்டிருந்த சித்தார்த் அவனது அறையினுள் அனுமதியின்றி கண்ணாடி ஜன்னல்களின் உதவியுடன் அத்துமீறி நுழைந்த ஆதவனின் கதிர்கள் செய்த குறும்பினால் கண் விழித்தான். துயில் சிறிது கலைந்தாலும் படுக்கை அவனை விடுவேனா என அடம்பிடிக்க சிறிதுநேரம் அப்படியே படுத்திருந்தான். காலைநேரத்தில் உறக்கம் கலைந்தும் கலையாமலும் இருக்கும் இரண்டுங்கெட்டான் நிலையில் கண் மூடி கிடக்கும் சுகத்துக்கு ஈடு இணை எதுவும் இவ்வுலகில் இல்லை. அதை அனுபவித்தபடி படுத்திருந்தவனின் மனம் வழக்கம் போல அமைதியாக இருந்தது. அன்றைய தினம் ஷூட்டிங் எதுவுமில்லை. எனவே தாமதமாக எழுந்தாலும் ஒரு பாதகமும் நேரப்போவதில்லை. அவனது அந்த இனிய மனநிலையைப் பாதியில் துண்டித்தது மொபைல் போனின் செல்லச்சி...
Super
ReplyDeletethank you sis
Delete