Posts

Showing posts from February, 2025

பூங்காற்று 48

Image
  நீரஜாட்சி அன்று காலையில் எழும் போதே அவளுக்கு மனது சரியில்லை. முதல் வேளையாக முகம் கழுவி விட்டு வராண்டாவில் சென்று காற்றாட அமர்ந்தவள் டியூசனுக்கு செல்லும் விக்கிக்கு டாட்டா காட்ட அவன் சைக்கிளில் ஏறியவன் "நீருக்கா! நான் இன்னும் ஒன் ஹவர்ல டியூசன் முடிச்சு வந்துடுவேன். அதுக்கு அப்புறம் மேட்சை ஸ்டார்ட் பண்ணுவோம்" என்று அறிவிப்பு விடுத்தபடி சென்றான். அவன் செல்வதை பார்த்துவிட்டு வனஜா "என்னமோ போ நீரு! இவன் பப்ளிக் எக்சாம்ல என்ன மார்க் வாங்குவானோனு அவனுக்கு பயம் இருக்கோ இல்லையோ எனக்கு டென்சனா இருக்கு. ஹாஃப் இயர்லில எய்ட்டி பர்சன்டேஜ் தான் வாங்கியிருக்கான்" என்று வருத்தமாக கூற நீரஜாட்சி "அக்கா எய்ட்டி பர்சண்டேஜ் உங்களுக்கு கம்மியா தெரியுதா ? பப்ளிக் எக்சாம் மார்க் நம்ம வாழ்க்கையை தீர்மானிக்கிறது இல்லக்கா. அதை தவிர அவனோட மத்த பழக்க வழக்கங்கள் தான் அவனை நல்ல மனுசனா காட்டும். வெறும் மார்க்கை வச்சு அவனை எடை போடாதிங்க. இப்போ இல்லைனாலும் வருங்காலத்துல அவன் ஒரு நல்ல நிலமைக்கு வருவான்" என்று விக்கியை புகழ்ந்து தள்ள வனஜா "அது சரி! நீ அவனை விட்டுக...

பூங்காற்று 8

Image
  ஒருவாறு அனைத்துக் கலவரங்களும் அடங்கி மாலையில் சேஷன் கிருஷ்ணஜாட்சியின் கைப்பட நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் ஸ்ரீநிவாசவிலாசத்திலிருந்துப் புறப்பட்டு விட்டார். பட்டாபிராமன் கும்பகோணத்திலிருக்கும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்திக்கு போன் செய்து கிருஷ்ணஜாட்சியின் பள்ளியில் மதிப்பெண் சான்றிதழ் எப்போது கொடுக்கப்படும் என்பதை விசாரிக்கச் சொல்லிவிட்டு அக்கடாவென்று தோட்டத்து ஊஞ்சலில் அமர்ந்துவிட்டார். இன்று ஒரு நாளில் மட்டும் தன் கணவருக்குத் தான் எத்தனை மனவேதனை என்ற வருத்தத்துடன் அவரருகில் அமர்ந்தார் சீதாலெட்சுமி. "ஏண்ணா! ரொம்ப களைப்பா தெரியறேளே ? முடியலையா ?" என்று ஆதரவாக கேட்க சகதர்மிணியின் குரலைக் கேட்டதும் இவ்வளவு நேரம் விழி மூடி ஊஞ்சலில் சாய்ந்திருந்தவர் கண்ணைத் திறந்தார். சீதாலெட்சுமியின் கவலைத் தோய்ந்த முகத்தைப் பார்த்ததும் அதைப் போக்க விழைந்தவராய் "இல்லடி சீதே! நேக்கென்னடி நன்னா தான் இருக்கேன். ஒரு வழியா பேத்திகள் ரெண்டு பேரோட பிரச்சனைக்கும் தீர்வு கண்டுட்டேனோ இல்லையோ ? அந்த நிம்மதி தான். வேற ஒன்னுமில்லடி நேக்கு" என்றுச் சொல்ல சீதாலெட்சுமியும் பெருமூச்சு வ...

பூங்காற்று 7

Image
  பத்மாவதி வந்துவிட்டுப் போனதற்கு அடையாளமாய் அவரது மல்லிகைப்பூ வாசம் இன்னும் அறையைச் சுற்றி வர கிருஷ்ணஜாட்சி மெதுவாக எழுந்து சுவரில் மாட்டி வைத்திருந்த அன்னையின் போட்டோவை தடவியவள் "மா! உங்க அப்பா அந்த காலத்துலயே உங்களை பி.ஏ படிக்கவச்சார்னு எவ்ளோ பெருமையா சொல்லிப்பிங்க ! ஆனா இன்னைக்கு உங்க பொண்ணுக்கு மேல படிக்கிற அதிர்ஷ்டம் இல்லம்மா. படிப்பா சுயமரியாதையா னு பார்த்தா எனக்கு இப்போதைக்கு என்னோட சுயமரியாதை தான் எனக்கு முக்கியம். இப்போ படிக்கலைனா என்னமா நான் கொஞ்ச நாள் கழிச்சு படிச்சுக்கிறேன்" என்றாள் மறைக்கப்பட்ட வேதனையுடன். அதற்குள் மைத்ரேயியும் நீரஜாட்சியும் விண்ணப்பத்தோடு வருவது அவர்களின் பேச்சுச்சத்தத்தில் அறிந்து கொண்டவள் அவர்கள் அவுட் ஹவுஸிற்குள் வராமல் வீட்டிற்குள் செல்வதை அறிந்ததும் பதற்றமாகிவிட்டாள். இது அவளது மாமா இருவரும் மதியவுணவுக்காக வரும் நேரம். இந்த நேரத்தில் அவர்களிடம் போய் நான் படிக்க விரும்பவில்லை என்று எப்படி கூறுவது என்பது தான் அவளின் யோசனை. ஆனால் அதைப் பார்த்துக் கொண்டிருந்தால் தனக்கும் தங்கைக்கும் இன்னும் அவமானங்கள் வருங்காலத்தில் வர வ...

பூங்காற்று 6

Image
ரகுநந்தன் அன்று நீரஜாட்சியிடம் தான் பேசியவிதம் அதிகப்படி என்பதை உணர்ந்து கொண்டவன் "அது என்னவோ குழந்தைத்தனமா நடந்திண்டா நானும் இப்பிடியா அவளண்ட பேசி வைக்கணும் ?  நந்து நோக்கு ஏன்டா இவ்வளவு கோவம் வர்றது ? உன்னை விட மூனு வயசு சின்னப்பொண்ணு கிட்ட இப்பிடி பேசிருக்கப்படாது தான்" என்று தன்னைத் தானே கடிந்து கொண்டான். மறுநாள் காலையில் அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட வேண்டியது தான் என்ற முடிவுடன் உறங்கியவன் காலையில் எழுந்ததும் சித்தியிடம் சென்று தான் அவளிடம் மன்னிப்பு கேட்க போவதாகச் சொல்ல மைதிலி அவனைப் போக வேண்டாம் என்று சொல்லிவிட்டு சமையல்கட்டில் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தார். " சித்தி நேக்கு புரியறது. நான் பேசுன விதம் தப்பு தான். அவளும் அம்மாவைப் பத்தி என்னண்டவே தப்பா பேசலா மா ? ஓகே ! நானும் சைல்டிஷ்ஷா பிஹேவ் பண்ணிட்டேன். அதுக்கு தான் சாரி சொல்லப் போறேன் சித்தி" என்று சமையல்கட்டை விட்டு வெளியேற முயன்றவனை வேகமாகத் தடுத்தவர் "டேய் கண்ணா நான் சொல்லுறது நோக்கு இன்னுமா புரியல ? இன்னும் பதினாறு நாளைக்கு நீ அவளைப் பார்க்கக் கூடாதுடா. அவ பெரிய மனுஷி ஆயிட்டா...