பூங்காற்று 41

காலையில் கண்ணை கசக்கிக் கொண்டு விழித்தாள் அவள். கலைந்திருந்த சுருண்ட கூந்தலை ஒதுக்கிவிட கைகள் உயரும் போது தான் தெரிந்தது தான் அவனது அணைப்பில் இருக்கிறோம் என்பது. கையை விலக்க முயற்சித்து தோல்வியுற்றவள் "நேத்து நைட் படிச்சு படிச்சு சொல்லியும் ஹக் பண்ணிட்டு தூங்கற அளவுக்கு இவருக்கு தைரியமா ?" என்று முணுமுணுக்க அவளை பொம்மையை அணைத்திருக்கும் குழந்தை போல தனது அணைப்புக்குள் வைத்திருந்தவன் " பொண்டாட்டியை ஹக் பண்ணுறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா ?" என்றபடி கண்ணை திறந்து விஷமமாக புன்னகைத்தான். அவன் புன்னகைத்த போது வேகமாக அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் "என்ன உரிமை கிடையாதா ? கடமையை செய்யாதவங்க உரிமையை பத்தி பேசவே கூடாது ஹர்சா" என்று மூக்குநுனி சிவக்குமளவுக்கு கோபத்தில் கத்தினாள் கிருஷ்ணஜாட்சி. ஹர்சவர்தன் காதுமடல்களை தேய்த்தபடி எழுந்தவன் "நேத்து நைட் நான் உன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் தானே. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன அர்த்தம் ? உன் கிட்ட கேட்டுட்டு தான் நான் தாலியை கட்டுனேன் கிருஷ்ணா. இப்போவும் நான் உன்னை விட்டு விலகி தான் இ...
Superu
ReplyDeleteஅன்புடை அன்றிலே...!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 10)
பொண்டாட்டியை பிரிஞ்சிருந்தா தான் அவளோட அருமையே தெரியும் போல.
பக்கத்துல இருந்தா..சீண்டக்கூட
மாட்டாங்க போல. சின்ன சின்ன அக்கறை, அன்பு, அணைப்பு, தட்டிக் கொடுக்குறது, ரெண்டு வார்த்தை வாயைத் திறந்து பேசுறது... இதெல்லாம் வெளிப்படையா காட்டினாலே போதும் சம்சார சாகரம் எந்தவொரு தடா இல்லாம கூலா ட்ராவலாகிடும்... அம்புட்டு தாங்க விஷயமே..!
ஆங்.. தனு அப்பா சொன்னது பாயிண்ட். பிள்ளை வேணும், பிள்ளை வேணும்ன்னு நோகாம நோன்பு நேர்ந்துக்குட்டா மட்டும் போதாது. அந்த பிள்ளையை பெத்தெடுக்க பொம்பளைங்க
எவ்வளவு கஷ்டப்படுறாங்க..?
என்ன பாடுபடறாங்க என்கிறதையும் தெரிஞ்சுக்கணும். புரிஞ்சுக்கணும்.
சும்மா இருக்கிறவளை சுரண்டி விடறதே தனுவோட வேலையாப் போச்சு..! போடா ராசா போ... போய் காலுல விழறையோ, இல்லை கையை பிடிக்கறையோ... அது உன் இஷ்டம், உன் கஷ்டம்...போய் சமாதானப்படுத்திட்டு வா ராசா..!
😄😄😄
CRVS (or) CRVS 2797
ஊருக்குப் போய் மனைவியை எப்படித் தான் சமாளிக்கும் போகிறானோ
ReplyDelete