பூங்காற்று 41

காலையில் கண்ணை கசக்கிக் கொண்டு விழித்தாள் அவள். கலைந்திருந்த சுருண்ட கூந்தலை ஒதுக்கிவிட கைகள் உயரும் போது தான் தெரிந்தது தான் அவனது அணைப்பில் இருக்கிறோம் என்பது. கையை விலக்க முயற்சித்து தோல்வியுற்றவள் "நேத்து நைட் படிச்சு படிச்சு சொல்லியும் ஹக் பண்ணிட்டு தூங்கற அளவுக்கு இவருக்கு தைரியமா ?" என்று முணுமுணுக்க அவளை பொம்மையை அணைத்திருக்கும் குழந்தை போல தனது அணைப்புக்குள் வைத்திருந்தவன் " பொண்டாட்டியை ஹக் பண்ணுறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா ?" என்றபடி கண்ணை திறந்து விஷமமாக புன்னகைத்தான். அவன் புன்னகைத்த போது வேகமாக அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் "என்ன உரிமை கிடையாதா ? கடமையை செய்யாதவங்க உரிமையை பத்தி பேசவே கூடாது ஹர்சா" என்று மூக்குநுனி சிவக்குமளவுக்கு கோபத்தில் கத்தினாள் கிருஷ்ணஜாட்சி. ஹர்சவர்தன் காதுமடல்களை தேய்த்தபடி எழுந்தவன் "நேத்து நைட் நான் உன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் தானே. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன அர்த்தம் ? உன் கிட்ட கேட்டுட்டு தான் நான் தாலியை கட்டுனேன் கிருஷ்ணா. இப்போவும் நான் உன்னை விட்டு விலகி தான் இ...
அன்புடை அன்றிலே..!
ReplyDeleteஎழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 3)
ஆரம்பத்துல ரெண்டு பேருக்குள்ளேயும் டெர்ம்ஸ்
நல்லாத்தானே போயிட்டிருந்தது.... அப்புறம் என்னாச்சு...? சாந்தனுவோட நலன்ல இவ அக்கறை காட்டறதும், சம்ருதியோட படிப்பு விஷயத்துல இவன் சர்க்கரையா பேசுறதும்ன்னு
எல்லாமே ஸ்மூத்தா தானே
போயிட்டிருந்தா போல. இதோ அவனுக்கு ஆஃபர் லெட்டர் வந்ததுமே, இவ குதிச்சுக்கிட்டு அவனை போன்லயே வாழ்த்துறதும், அவன் அதுக்கு நிறைய சம்பாரிச்சு உன்னை ராணி மாதிரி வைச்சுக்கணும்ன்னு உளறதும், அதுக்கு அவ ஐ.பி.சி.சி. & பைனல் எக்ஸாம் முடிச்சு ப்ராக்டிஷுக்குப் போயிட்டா என்னை நானே பார்த்துக்கிற அளவுக்கு நானே சம்பாதிச்சுப்பேன்னு சொல்றதும், பதிலுக்கு அவன் பொண்டாட்டியை புருசன் பார்த்துக்கிறது தான் காலம்காலமா ஆண்கள் குத்தகைக்கு எடுத்திக்கிற மனுதர்மம்ன்னு டையலாக் விடறதும், அதுக்கு அவ என் புருசனுக்கு நான் பொண்டாட்டியா மட்டும் தான் இருக்க விரும்புறேன், நாட் லைக் எ ஃபினான்ஷியல் பார்டனா இருக்க விரும்பலை... ரெண்டு பேருமே தோழா, தோழா தோள் கொடுத்துப்போம்
அப்ப தான் லைஃப் ரொம்ப ஸ்மூத்தா போவும், இல்லைன்னா கூட்ஸ் வண்டி மாதிரி கவுத்துக்கும்ன்னு எதிர்கால வாழ்க்கை வரைக்கும் ரோடு போட்டவங்களுக்கு இடையே, அப்படி என்ன நடந்துடுச்சுன்னு இத்தனை பெரிய விரிசல் விமுந்ததுன்னு தெரியலையே.?
ஈகோவாலயா ? இல்லை
சரியான புரிதல் இல்லாததாலயா ?
எதுவா இருந்தாலும்,
காதலுக்கு கண் இல்லை ; கல்யாணத்துக்கு காதில்லைன்னு,
காதலுக்கு முன்னாடி ஸ்பெஷலா, தெரிஞ்சதெல்லாமே, கல்யாணத்துக்குப் பின்னாடி
எப்படி அன்ஸ்பெஷலா மாறிடுச்சுன்னுத்தான் தெரியலையே..?
இவங்க காதல் சரியில்லையா..?
இல்லை, இவங்க ரெண்டு பேரும் காதலிக்கவே இல்லையா..?
இல்லை, இவங்களோடது காதலே இல்லையா...?
என்ன கண்றாவிடா இது...????
😀😀😀
CRVS (or) CRVS 2797
Nice story
ReplyDelete