பூங்காற்று 41

Image
  காலையில் கண்ணை கசக்கிக் கொண்டு விழித்தாள் அவள். கலைந்திருந்த சுருண்ட கூந்தலை ஒதுக்கிவிட கைகள் உயரும் போது தான் தெரிந்தது தான் அவனது அணைப்பில் இருக்கிறோம் என்பது. கையை விலக்க முயற்சித்து தோல்வியுற்றவள் "நேத்து நைட் படிச்சு படிச்சு சொல்லியும் ஹக் பண்ணிட்டு தூங்கற அளவுக்கு இவருக்கு தைரியமா ?" என்று முணுமுணுக்க அவளை பொம்மையை அணைத்திருக்கும் குழந்தை போல தனது அணைப்புக்குள் வைத்திருந்தவன் " பொண்டாட்டியை ஹக் பண்ணுறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா ?" என்றபடி கண்ணை திறந்து விஷமமாக புன்னகைத்தான். அவன் புன்னகைத்த போது வேகமாக அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் "என்ன உரிமை கிடையாதா ? கடமையை செய்யாதவங்க உரிமையை பத்தி பேசவே கூடாது ஹர்சா" என்று மூக்குநுனி சிவக்குமளவுக்கு கோபத்தில் கத்தினாள் கிருஷ்ணஜாட்சி. ஹர்சவர்தன் காதுமடல்களை தேய்த்தபடி எழுந்தவன் "நேத்து நைட் நான் உன் கிட்ட தெளிவா சொல்லிட்டேன் தானே. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சா என்ன அர்த்தம் ? உன் கிட்ட கேட்டுட்டு தான் நான் தாலியை கட்டுனேன் கிருஷ்ணா. இப்போவும் நான் உன்னை விட்டு விலகி தான் இ...

அன்பு 4

This story is removed for book printing

Comments

  1. அன்புடை அன்றிலே...!
    எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
    (அத்தியாயம் - 4)

    சாந்தனு சொல்றதும் உண்மை தான்...! வீடு, கார், சேவிங்ஸ் இன்வெஸ்ட்மென்ட் எல்லாத்தையும் உடனுக்குடனே
    திட்டமிடுபவர்கள், இந்த குழந்தை விஷயத்தையும் திட்டமிட்டால் வாழ்க்கை மிகவும் சிறப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்கும் என்று தோன்றுகிறது.

    குழந்தைகள் என்பது ஒரு வரம் மாதிரி. அது காசு பணம் மாதிரி கிடையாது. அது நமக்கு எப்ப, எப்படி கிடைக்குமோ நமக்கேத் தெரியாது. நம்மளால தள்ளிப் போட கூட முடியும். ஆனா, உடனேங்கறது மட்டும் நம்ம கையில கிடையாது. ஏன்னா, இப்பவுள்ள சூழ்நிலையில உடல் சார்ந்த நிறைய பிரச்சினைகள் பெண்ணுக்கும், பையனுக்கும் ரெண்டு பேருக்குமே இருக்குது. அதை ஆரம்பத்துலயே கண்டு பிடிச்சிட்டா, அடுத்த மூணு வருசத்துல நமக்கே நமக்குன்னு அட்லீஸ்ட் ஒரு பேபியாவது நம்ம கையில தவழும். நிறைய பேருக்கு ரெண்டாவது குழந்தைங்கறது இப்பவெல்லாம் தலை கீழ நின்னு தண்ணி குடிக்கிற மாதிரி தான். அது தவிர, குறைகள் இருந்தாலும் நாம எடுத்துக்கிற ட்ரீட்மெண்ட்லயே தெரிஞ்சிதறதோட, உடல் சார்ந்த பிரச்சினைக்கு உடனுக்குடனே தீர்வும் கிடைச்சிடும். அப்படி பிரச்சினைகள் தீராத பட்சத்துல வேறெதாவது வழியில் குழந்தையை பெற முயற்சிப்பதோ, அல்லது வழியே இல்லாத பட்சத்தில் குழந்தையை தத்தெடுப்பதோ, அல்லது நாம் இருவர், நமக்கேன் இன்னொருவர் என்று வாழ்வை இருவராகவே தொடருவதோ, அல்லது பரஸ்பர புரிதலின் அடிப்படையில் பிரிந்து செல்வது என்று நம் வாழ்க்கையை நாமே சீரமைத்துக் கொள்ளலாம் தானே....? தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், பல சங்கடங்களையும், அதிரடி திருப்பங்களையும் தான் சந்திக்க வேண்டியிருக்கும்.

    ம்... சாந்தனுவும் சம்முவும் அப்படியொரு புரிதல் இல்லாத தன்மையால் தான், இப்படி கிழக்கும் மேற்குமாக வாழ்க்கையை சிக்கலாக்கி கொண்டு, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் விக்கிக் கொண்டு திரிகிறார்களோ என்று தோன்றுகிறது. அதுவே தானோ...???
    😆😆😆
    CRVS (or) CRVS 2797


    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பூங்காற்று 1